
பூகொடை நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் சுற்றுப்புற சூழலில் டெங்கு குடம்பிகள் காணப்பட்டதனால் ஹோட்டல் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்தும்படி பூகொடை மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் செல்வி நிலுபுளி லங்காபுர கட்டளையிட்டார்.
பூகொடை சுகாதார உத்தியோகத்தர் சம்பத் திஸாநாயக்கவினால் இவர் பூகொடை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோதே மேற்கண்டவாறு நீதிவான் கட்டளையிட்டார்.
இதேவேளை, டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் வகையில் வீட்டுத் தோட்டத்தை வைத்திருந்த குற்றத்திற்கு 12 பெண்கள் உட்பட 28 பேருக்கு பூகொடை மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் செல்வி நிலுபுளி லங்காபுரி ஒருவருக்கு தலா 1000 வீதம் 28 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார்.
பூகொடை பொலி. மண்டாவல, கந்தகொல்ல, கம்பொல கெதர போன்ற பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்களுக்கு எதிராக பூகொடை மஜிஸ்திரேட் அபராதம் விதித்தார்.