டெல்லி ஆடுகளம் சிறப்பாக உள்ளது! போல்லாக் புகழாராம்

281
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் சுழற்பந்துக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கடுமையாக திணறியது.

மொகாலியில் நடந்த முதல் டெஸ்டில் 108 ரன்னிலும், நாக்பூரில் நடந்த 3–வது டெஸ்டில் 124 ரன்னிலும் தோற்றது. சுழற்பந்துக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டதற்கு பல முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
தற்போது 4–வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் டெல்லி ஆடுகளத்துக்கு தென் ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் ஷான் போல்லாக் பாராட்டு தெரிவித்தார்.
4–வது டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் நன்றாக இருந்தது. டெல்லி ஆடுகளம் சிறப்பாக உள்ளது. இது துடுப்பாட்டக்காரர்களுக்கு சிறிது ஒத்துழைத்தது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர் பியட்டுக்கும் ஒத்துழைத்தது. வேகப்பந்து வீச்சாளர் அபோட் நன்கு வீசினார். ஷாட் பிட்ச் பந்துகளை வீசினார்.
இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க துடுப்பாட்ட வீரர்கள் இதுவரை சோபிக்கவில்லை. அவர்கள் ரன் குவிக்கும் நெருக்கடியில் உள்ளனர் என போல்லாக் மேலும் தெரிவித்துள்ளார்.
SHARE