
ஜீவா
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
ஆனால் பலரும் இதை பொருட்படுத்தாமல் வெளியே சென்று வருகிறார்கள். இந்த நிலையில், ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு உணர்த்தும் வகையில், நடிகர் ஜீவா என்று இருந்த தனது டுவிட்டர் ஐடியையே உள்ளே போ என்று பெயர் மாற்றியிருக்கிறார்.