தங்கூசி வலைகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது!

175

மீன்பிடிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள தங்கூசி வலைகளை வைத்திருந்த சந்தேக நபரை நொச்சியாகம பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடைப்படையினர் கைது செய்துள்ளனர்.

அனுராதபுரம் உலுக்குளம் விசேட பொலிஸ் அதிரடைப் படை முகாமிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் நொச்சியாகம ரணவராவ பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கிருந்து அதிகமான வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு,கடை உரியையாளரும் கைது செய்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபரை நொச்சியாகம பொலிஸார் தடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE