தங்கைக்காக தமக்கை செய்த காரியம்..! ஹம்பாந்தோட்டையில் சம்பவம்

268

images

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தங்கைக்காக பரீட்சைக்குத் தோற்றிய தமக்கை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை பொலிஸார் குறித்த யுவதியை கைது செய்துள்ளனர். ஹம்பாந்தோட்டை சுச்சீ தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் சார்பில் அவரது சகோதரி பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

பரீட்சையின் போது ஆள் மாறாட்டம் ஏற்பட்டுள்ளதனை கண்டறிந்த பரீட்சை மேற்பார்வையாளர் இது குறித்து ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த யுவதியை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

SHARE