தங்க ஆபரணங்களுடன் இந்திய பிரஜை கைது

140

சட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இந்திய பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இந்தியாவை சேர்ந்த 32 வயதுடைய வியாபாரி என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த நபர் இன்று அதிகாலை 10.05 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இலங்கை வந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் நடடிவக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது 35 இலட்சம் ரூபா பெறுமதியான 548 கிலோ கிராம் எடையுடைய ஒருதொகை தங்க ஆபரணங்களை அவரிடமிருந்து மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE