தங்க நகைகள் உண்டியல் பணம் திருட்டு

191

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வளஹா .டீமலை  மெளசெல்ல கீழ் பிரிவு  ஆகிய தோட்ங்ககளில் உள்ள ஸ்ரீ அம்மன் கோயில்களில் கதவுகள் இன்று அதிகாலை உடைக்கப்பட்டு  அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளும் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல் பணம் ஆகியன  திருட்டுப்போயுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர் .

இன்று காலை கோவிலுக்கு சென்று பார்க்கும்போதே கதவுகள்  உடைக்கப்பட்டிருந்ததை அறிந்ததையடுத்து பிரதேச மக்கள் லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

களவு போன தங்க ஆபரணங்கள் மற்றும் உண்டியல் பணம் ஆகியவற்றின் பெறுமதிகள் தொடர்பில் விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் இத்தோடு இத்தோட்டத்தில் கடந்த வாரம் வருடாந்த தேர்த்திருவிழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயம்..

SHARE