தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி கைதிகளுக்கு இந்த ஆண்டு நிறைவிற்குள் தீர்வு வழங்கப்படும்

230

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி கைதிகளுக்கு இந்த ஆண்டு நிறைவிற்குள் தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய தீர்வு வழங்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் கைதிகளை பார்வையிட்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தங்களை விடுதலை செய்யுமாறு கோரி இந்தப் போராட்டத்தை கைதிகள் முன்னெடுத்து வருகின்றனர். சிலருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE