நீரின்றி அமையாது உலகு என்பதற்கேற்ப அனைத்து தேவைகளுக்கும், அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமான ஒன்று என்றால் அது தண்ணீர் தான்.
சமைக்க, விவசாயம் செய்ய, வீட்டு தேவைகளுக்கு என இப்படி அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் மிக முக்கியமானது சுத்தமான தண்ணீர், அசுத்தமான தண்ணீர் பல்வேறு நோய்களுக்கு வழிவகுத்து விடுகின்றது. சாதாரண தலைவலி, சோர்வு, மூட்டு வலி இவையெல்லாம் தண்ணீர் குடித்தாலே சரியாகிவிடும். 3 நாளுக்கு மேல் தண்ணீர் இல்லாமல் ஒருவர் உயிரோடு இருக்க முடியாது. நம் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணத்திற்கு, 12 அவுன்ஸ் தண்ணீர் நீங்கள் குடித்தால் 8 அவுன்ஸ் தண்ணீரை உடல் 15 நிமிடத்தில் உறிஞ்சி விடும். நாள் ஒன்றுக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம். மனித உடலில் தண்ணீரின் பங்கு: • மனித மூளையில் 70% நீர்தான். • நான் மூச்சு வெளிவிடுவதில் 1 கப் நீர் (250 மி.லி.) வெளியேறுகின்றது. • ரத்தத்தின் 80% நீர்தான். • எலும்புகளில் 22% நீர்தான். • சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் உடலில் திசுக்களுக்கு கொண்டு செல்வது நீர்தான். • தசைகளின் 75 % நீர்தான். • உணவை சக்தியாக மாற்ற உதவுவது நீர்தான். • ஆக்ஸிஜனை மூச்சுக்காக ஈரப்படுத்துவது நீர்தான். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் • அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடலானது சுத்தமாகும். • அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானது முற்றிலும் வெளியேறிவிடும். • தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். இதனால் உடலானது நச்சுக்களின் சுத்தமாக இருக்கும். • தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். • பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலியானது குறையும், அதுமட்டுமின்றி அல்சர் பிரச்சனை சரியாகும். • காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிக் விகிதமானது 24 சதவீதம் அதிகரிக்கும். இதனால் உண்ணும் உணவானது விரைவில் செரிமானமடைந்துவிடும். • வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும். • எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். • குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும். |