தந்தையும் மகனும் விபத்தில் பலி ; பெண்ணொருவர் காயம்

137

ஹங்வெல்லயில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியின் ஹங்வெல்ல பகுதியில் குறித்த விபத்து இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

தனியார் பயணிகள் பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதுண்டதிலேயே முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவத்தில் 80 வயதுடைய தந்தையும் 44 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE