யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான மக்கள் கருத்தறியும் அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“போர்க் குற்றத்துக்கான நீதியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் வேண்டும். முடிவடைந்த போர் மீண்டும் ஏற்படாது என்று உறுதியாகக் கூறிவிட முடியாது. இன்னமும் தமிழ் மக்கள் தனிநாட்டுக் கோரிக்கையில் இருந்து
விடுபடவில்லை. மக்களின் எதிர்கால நலனுக்காக கூட்டாட்சியில் வாழும் யோசனையினை முன்வைக்கின்றோம். இந்த அரசியலமைப்பபு சீராக முன்வைக்கப்பட்டால் தமிழ் மக்கள், தனிநாடு என்ற கோரிக்கையில் இருந்து விடுபடுவதற்கான வாய்புக்கள் உருவாகும்.
சிங்கள மக்கள் தனியான அபிலாசைகளுடன் இருப்பார்கள். அது அவர்களுடைய விருப்பு. ஆனால் தமிழ் பேசும் மக்கள் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்து இருப்பதையே விரும்புகின்றனர். சமஅந்தஸ்து வழங்கப்பட்டு மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும். மாறாக எந்த ஒரு மாநிலத்திற்கும் விசேட அந்தஸ்துகள் வழங்கப்படுதல் கூடாது. முஸ்லிம் மக்கள் தமக்கான தலைவிதியைத் தாமே தீர்மானிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
மாநிலங்கள் விரும்பும் வகையில் தனித்துவமான கொடி, மாநிலத்துக்கான தேசியகீதம், மாநிலங்களுக்கான பெயர் என்பன உரித்தாக்கப்பட்ட வகையில் மாநிலங்கள் அமைக்கப்பட்டு செயற்படுதல் வேண்டும். பிராந்திய சமஅந்தஸதுடன் அமைக்கப்ட வேண்டும். இவை சரியாக அமைக்கப்பட்டனவா என்பதை ஐந்து ஆண்டுகளின் பின் ஐ.நா சபையின் மேற்பார்வையில் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் எதாவது ஒன்றின் மத்தியஸ்த நிலையுடன் கவனிக்கப்படுதல் வேண்டும்” என்றார்.