தனியார் – அரச பேருந்து நடத்துனருக்கு இடையே பாரிய மோதல்! 4 பேருக்கு நேர்ந்த நிலை

83

 

இ.போ. சபைக்கு சொந்தமான பேருந்து சாரதி நடத்துனருக்கும், தனியார் பேருந்து சாரதி, நடத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று (23-01-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் தனியார் பேருந்து தரிந்து நின்றுள்ளது.

இதன்போது, கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த இ.போ. சபை பேருந்தும் வருகை தந்து புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக தரிந்து நின்றுள்ளது.

அப்போது இரண்டு பேருந்தின் ஊழியர்களுக்கிடையே நேரசூசி தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் இ.போ.ச பேருந்தின் விளக்கு உடைக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இ.போ.ச, தனியார் பேரூந்து ஆகிய இரு பேரூந்தின் நடத்துனர், சாரதி என நால்வரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் இரு பேரூந்தினையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றமையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE