சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்கள் டெட்டனஸ் ஊசி போட்டுக் கொள்ளுமாறு நடிகர் சித்தார்த் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகர் சித்தார்த், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் தன்னார்வலர்களுடன் சேர்ந்து உதவி வருகிறார்கள். மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதுடன் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களை மீட்டும் உள்ளனர்.
இந்நிலையில் சித்தார்த் தன்னார்வலர்களுக்கு டெட்டனஸ் ஊசி போட்டுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.