சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவத்துக்கு பிறகு பேனர் கலாசாரத்தை ஒழிக்க குரல்கள் ஒலிக்கின்றன. அரசியல் கட்சிகள் பேனர்களை தவிர்க்கும்படி தொண்டர்களை வற்புறுத்தி உள்ளன. இதேபோல் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் ரசிகர்களுக்கு தடை விதித்தனர்.
விஜய் வேண்டுகோளை ஏற்று சென்னையில் சமீபத்தில் நடந்த பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் பேனர் வைக்கவில்லை. அஜித்குமார் ரசிகர்களும் பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து போஸ்டர்கள் ஒட்டினர். இந்த நிலையில் தனுஷூம் தனக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
