சிறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவரை, அவரது உறவினர்களை மீண்டும் சிறைக்கு அழைத்து வந்து ஒப்படைத்த சம்பவம் ஒன்று கண்டியில் நடந்துள்ளது.
கண்டி மேல் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணை ஒன்றில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி விட்டு, பல்லேகலையில் உள்ள சிறைக்கு மீண்டும் அழைத்து வரும் போது சிறை அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கைதி தப்பிச் சென்று சில மணி நேரத்தில் அவரை அவரது உறவினர்கள் மீண்டும் அழைத்து வந்து சிறையில் ஒப்படைத்தனர்.
கண்டி பிரதேசத்தை சேர்ந்த இந்த சந்தேக நபர் ஹெரோயின் போதைப் பொருள் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
தமது பாதுகாப்பில் இருந்த கைதி தப்பிச் சென்ற சம்பவம் காரணமாக இரண்டு சிறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.