தமிழகத்திலிருந்து நாளை நாடு திரும்பும் இலங்கை அகதிகள்

322

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையத்தின் உதவியுடன் இந்தியாவில் இருந்து மேலும் 43 இலங்கை அகதிகள் நாளைய தினம் நாடு திரும்பவுள்ளனர்.

சிறைச்சாலைகள் மீளமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி 43 அகதிகளும் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானத்தின் மூலம் நாளை முற்பகல் 10.20க்கும், மிஹின் எயார் மூலம் பகல் 12.30க்கும் இலங்கையை வந்தடைவர்.

முதல் பிரிவு திருச்சியில் இருந்தும் இரண்டாம் பிரிவு மதுரையில் இருந்தும் இலங்கைக்கு வரவுள்ள அகதிகளில் அகதிகளில் 24 ஆண்களும் 19 பெண்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

இந்த நிலையில் 2011 முதல் இதுவரை 4589 அகதிகள் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

blogger-image-1379552954 refin Sri-Lankan-refugees

SHARE