சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்ற ரூபாதேவி என்ற தமிழக பெண்ணுக்கு பிபா லைசென்ஸ் வழங்கியுள்ளது.தமிழகத்தின் திண்டுக்கல்லை சேர்ந்த கால்பந்து வீராங்கனை ஜி. ரூபா தேவி(வயது 25). பிஎஸ்சி வேதியியல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பை முடித்துள்ள இவர், தொடக்கத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்துக் கழக அணிக்காக விளையாடியவர்.
பின்னர் மாநில மற்றும் தேசிய அணிகளுக்கு தேர்வாகி பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார், அதுமட்டுமின்றி தேசிய, ஆசிய அளவிலான போட்டிகளில் நடுவராக பங்கேற்றார். மேலும் கத்தார் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளிலும் நடுவராகப் பங்கேற்றார். இதனையடுத்து இவரை சர்வதேச போட்டிகளில் கால்பந்து நடுவராக செயல்பட பிபா லைசென்ஸ் வழங்கியுள்ளது. இதன் மூலம் தென்னிந்தியாவில் இருந்து சர்வதேச நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண் என்று பெருமையை பெற்றுள்ளார் |