தமிழரசு கட்சி நிர்வாகத்தில் மாற்றமில்லை : சாணக்கியன் திட்டவட்டம்

102

 

தமிழரசுக்கட்சியின் மகாநாடு மட்டுமே பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகமே சட்ட ரீதியாக இயங்கும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

திருகோணமலையில்நேற்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலளார் சந்திப்பு இன்று களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது கட்சி காரியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் குகதாசன் அவர்களே கட்சியின் மாநாட்டுக்கான ஆலோசனைக்கூட்டமாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போது சுமந்திரன் அவர்களை உபதலைவராக நியமிக்குமாறு சிறிதரன் கோரியிருந்தார்.

எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாது தம்மை பொதுச்செயலாளராக நியமிக்குமாறு இங்கு சுமந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

கட்சி பிளவுபடாமல் அனைவரையும் ஒருங்கிணைத்து கொண்டுசெல்லவேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

SHARE