சமீப காலமாக வெளிநாட்டு பக்தர்கள் இந்து கோவிலை நாடுவது அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், மன்னார் முழங்காவில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்துக்கு இரண்டு வெளிநாட்டு பக்தர்கள் வந்து சித்தி விநாயகரை தரிசித்தது சென்றமை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறு வெளிநாட்டவர்கள் வருவதன் மூலம் எமது தமிழ் கலாச்சாரத்தையும் இந்து மதத்தின் சிறப்பையும் எந்த அளவுக்கு அறிந்துள்ளார்கள் என்பதையும் மதிக்கின்றனர் என்பதையும் அறிய முடிகின்றது.
அத்துடன், தமிழரின் பெருமையை தமிழருக்கே உணர்த்தும் வகையிலும் இவர்களின் வருகை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.