தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை- காணொளிகள்

619

 

 

  ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின் அடிப்படையில் எல்.ரீ.ரீ.ஈ யின் வெளிநாட்டு செயல்பாடுகள் பற்றிய புதிய ஆதாரங்கள் உள்ளன” என்கிற அறிக்கை தொடர்பாகவும் மற்றும் திரு.ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது எல்.ரீ.ரீ.ஈ யிடமிருந்து வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களைச் சுட்டிக்காட்டி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எழுதிய கடிதம் தொடர்பாகவும், தற்போதைய அரசாங்கம் ஜனவரி 8, 2015க்குப் பின்னர் வெளிநாட்டிலும் மற்றும் ஸ்ரீலங்காவிலும், ஈழம் என்கிற இலக்கை அடைவதற்காக தொடர்ந்து முயற்சிக்கும் எல்.ரீ.ரீ.ஈ சார்பான புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ரி.என்.ஏ போன்றவர்களுக்கு இடமளிக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் மற்றும் அறிக்கைகள் ஆகிய இரண்டிலும் பின்னோக்கி வளைந்து கொடுக்கும் தன்மையை கடைப்பிடிப்பது ஏன் என்று ஸ்ரீலங்கா மக்களுக்க விளக்க வேண்டும்.
114525042009-vanni-avalam-30Burma Muslims 2download  rajapakse-cartoonsrilanka-killing-fields-newvanni-hospital

திரு. பெரேரா தெரிவிப்பதன்படி, வெளிநாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.ஈயின் செயற்பாடுகள் மற்றும் தங்கள் இலட்சியமான ஈழத்தை அடைவதற்கு நிதி வழங்குவதற்காக தொடர்ந்தும் நிதி சேகரிப்பில் அவர்கள் ஈடுபடுவது, அதை ஊககுவிப்பதற்காக தொடர்ந்து மேற்கிலுள்ள அரசாங்கங்களிடம் செல்வாக்கை செலுத்துவதற்காக அரசியல் கட்சிகளுக்கும் மற்றும் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் நிதி வழங்குவதற்காக எல்.ரீ.ரீ.ஈயின் பணத்தை பயன்படுத்துவதை அரசாங்கம் அறிந்திருக்குமானால், நல்லிணக்கம், புனர்வாழ்வு, குடியேற்றம் போன்றவற்றின் போர்வையில் ஈழத்தை முன்னெடுப்பதற்கு உதவி செய்ய ஸ்ரீலங்கா அரசாங்கம் விரும்புவதைப்போல தோன்றுகிறது. எல்.ரீ.ரீ.ஈ புலம் பெயர்ந்தவர்களும் மற்றும் ரி.என்.ஏயும் தங்கள் இலக்கான தமிழர்களுக்கு தனியான ஒரு நாடு என்கிற கொள்கையை மாற்றிக் கொள்ள விரும்பாதது வெளிப்படையாக தெரிகின்றது, அதனால்தான் தற்போதைய அரசாங்கமும் நாட்டை பிளவுபடுத்தும் எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்களின் கருத்துக்கு ஆதரவளிக்கின்றதா?

ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் வாஷிங்டனுக்கு விஜயம் செய்து அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திலுள்ளவர்களைச் சந்தித்ததின் பின்னர், அந்தச் சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் திரு. ஜோண் கெரி சொல்லியிருப்பது…..”தமிழர்களுடனான 30 வருடப் போரில் இருந்து ஸ்ரீலங்காவை வெளியே நகர்த்துவதற்கு” என்று. ஸ்ரீலங்காவை பிரதிநிதிப் படுத்திய திரு சமரவீர அந்த தவறான வாதத்தை சுட்டிக்காட்டி, போரானது தமிழர்களுடன் நடத்தப்பட்டது அல்ல ஆனால் தமிழ் பயங்கரவாதிகள் அல்லது அமெரிக்காவினால் ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ உடன்தான் நடத்தப்பட்டது  என்று ஏன் திருத்தம் செய்யவில்லை? திரு. சமரவீர அமைதியாக இருந்துள்ளார். ஏனென்றால் அது தமிழர்கள் மீதான போர் (தமிழ் மக்களின் மீதான ஒரு போர்) என்பதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார், மாறாக அது தமிழ் பயங்கரவாதிகள் மீதான போர் என்றோ அல்லது அமெரிக்காவிலுள்ள ஈழத்தை ஊக்குவிக்;கும் எல்.ரீ.ரீ.ஈ சார்பான புலம்பெயர்ந்தவர்கள் குறிப்பிடுவதைப் போல அது தமிழர்களுடான ஒரு போர் மற்றும் சமாதானம் மற்றும் சுபீட்சத்தை அடைவதற்கு வடக்கு மற்றும் கிழக்கு என்பனவற்றை ஒரு தனியான அலகாக உருவாக்கி அதற்கு விசேட அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்று வாதிடுபவர்களின் கருத்தினை அடிப்படையாக கொண்டு அமெரிக்கா இடும் கட்டளைக்கு ஸ்ரீலங்கா உட்படத் தயாராக உள்ளது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். ராஜாங்க திணைக்களத்தின் இந்த தவறான அறிவிப்பை திருத்தவேண்டிய பொறுப்பு வெளிநாட்டில் வாழும் ஸ்ரீலங்காவாசிகளிடம் விடப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து திரு. சமரவீர மார்ச் 19,2015ல் தெரிவித்துள்ள ஒரு அறிவிப்பில் சொல்லியிருப்பது, ஸ்ரீலங்காவின் புதிய அரசாங்கம் பெரியளவில் உள்ள இனச் சிறுபான்மை இனத்தவருடனான நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, வெளிநாட்டு பயங்கரவாதிகளின் பட்டியலில் உள்ள 16 குழுக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தமிழர்களை நீக்குவதற்கு  திட்டமிட்டு உள்ளது எனத் தெரிவித்திருந்தார். இந்த பட்டியல் வெளியிடப் பட்டதிலிருந்து  எல்.ரீ.ரீ.ஈ புலம்பெயர்ந்தவர்களின் கோரிக்கை இதுவாகவே இருந்தது. வெளிநாட்டில் எல்.ரீ.ரீ.ஈயின் செயற்பாடுகள் உள்ளதை அரசாங்கம் அறிந்திருக்குமானால், வெளிநாட்டில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்களை புறக்கணிப்பதற்கு எவ்வாறு அதனால் ஆதரவு வழங்க முடியும்?

வெளிநாட்டிலுள்ள பெரும்பான்மையான எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா பற்றி பொய்யான தகவல்களைக்கூறி, மனித உரிமை துஷ்பிரயோக கோரிக்கைகளை முன்வைத்து அகதி அந்தஸ்து பெற்றது மற்றும் அதில் கணிசமானளவு பேர்கள் எல்.ரீ.ரீ.ஈயின் அங்கத்தவர்கள் அல்லது அதன் ஆதரவாளர்கள் என்கிற உண்மையை ஏன் இந்த அரசாங்கம் அலட்சியம் செய்கிறது? இந்த எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களை வெளிநாட்டு பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குவதன் மூலம்தான்; அவர்களால் வெளிநாட்டிலும் மற்றும் ஸ்ரீலங்காவிலும் ஈழத்தை சட்டபூர்வமாக ஊக்குவிக்க முடியும் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெறும் சாத்தியமும் ஏற்படும் என்பதற்காகத்தான் தற்போதைய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதா?

ஐநா மனித உரிமைகள் சபையில் வெளியிடவிருந்த தீர்மானத்தை பிற்போட்டு விட்டதாக இந்த அரசாங்கம் பெரிய ஆரவாரத்தை எழுப்பியது. இதில் முக்கியமான உண்மை என்னவென்றால் அது வெறும் ஒரு ஒத்திவைப்பு மட்டுமே மற்றும் அந்த தீர்மானம் நிச்சயமாக செப்ரம்பரில் அறிமுகம் செய்யப்படும். இதை தொடர்ந்து ஐநா மனித உரிமைகள் சபை அங்கத்தவர்களை ஸ்ரீலங்காவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தது அந்த தீர்மானத்தில் இன்னும் சில சேர்க்கைகள் இடம் பெறக்கூடியதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது, இது ஸ்ரீலங்காவுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தலாம். வட மாகாணசபை  இங்கு தமிழர்களுக்கு எதிரான ஒரு இனப்படுகொலை இடம் பெற்றுள்ளது என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதை ஐநா மனித உரிமைகள் சபையிலும் சமர்ப்பித்துள்ள அதேவேளை தற்போதைய அரசாங்கம் அதையிட்டு அமைதியாக உள்ளது. ஏன் இந்த கருத்துக்கு எதிராக ஸ்ரீலங்காவில் சவால் விடக்கூடாது மற்றும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களை இந்த தவறான கூற்றை நிரூபிக்கும்படியோ அல்லது அதை திரும்பப் பெறும்படியோ ஏன் அழைப்பு விடுக்கக்கூடாது?

இனச்சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலை என்பன பிரபாகரனின் கொள்கையின் முக்கியமான ஒரு பகுதி  என ஸ்ரீலங்காவாசிகள் நன்கு அறிந்துள்ள அதேவேளை தமிழர்கள் ஸ்ரீலங்காவிலுள்ள ஏனைய மக்கள்மீது இனப்படுகொலை குற்றம் சாட்;டுவதும்கூட நல்லிணக்கத்தின் ஒரு பகுதியா? தமிழர்கள் அல்லாத ஸ்ரீலங்காவாசிகளின் நிலமை அச்சுறுத்தலுக்கு ஆளாகியும், மற்றும் தங்கள் நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து, வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப் பட்டு, அத்துடன் வேலையில்லா திண்டாட்டம் அல்லது தகுதியிலும் குறைந்த வேலை என்பனவற்றால் பாதிக்கப்பட்டு மற்றும் பயங்கரவாதத்தினால் பாதிப்புக்குள்ளானதுடன் தொடர்ந்தும் அமைதியுடன் துன்பப்படவேண்டும் என எதிர்பாக்கப்படும் தமிழர்கள் அல்லாத ஸ்ரீலங்காவாசிகளின் நிலமையை புறக்கணித்து எவ்வாறு இந்த அரசாங்கம் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதாக எதிர்பார்க்க முடியும். ஸ்ரீலங்காவாசிகள் அனைவரும் தங்கள் அரசாங்கத்திடமிருந்து சமமான உபசரிப்பை எதிர்பார்க்கக் கூடாதா?

எல்.ரீ.ரீ.ஈயின் செயற்பாடுகள் வெளிநாடுகளில் உள்ளன என்பதற்கு வெளிநாடுகளில் எல்.ரீ.ரீ.ஈயினை தடை செய்திருக்கும் அடிப்படையினை ஆதாரமாகக் கொண்டால் மற்றும் பிரதம மந்திரி இந்த அச்சுறுத்தல் பற்றி நன்கு அறிந்தும் இருந்தால்,இந்த ஆதாரத்தை புறக்கணிப்பது ஏன் இந்த அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது? குறுகிய கால அரசியல் ஆதாயத்துக்காக நாட்டின் பாதுகாப்பினை ஆபத்தில் சிக்கவைக்க அது விரும்புகிறதா? 1987ல் ஏற்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தப்படி ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள் விரும்பியதை தான் பெற்றுக் கொடுத்து விட்டதாக திரு.ராஜீவ் காந்தி தமிழ் நாட்டில் கோரிக்கை எழுப்பியது மற்றும் எல்.ரீ.ரீ.ஈ மற்றும் விக்கிரமசிங்கா அரசாங்கம் என்பனவற்றுக்கு இடையே ஏற்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம்(2002) என்பனவற்றைப்போல எல்.ரீ.ரீ.ஈக்கு அவர்களின் ஈழத்தை கொடுக்கும் முயற்சிகள் மீண்டும் தலைதூக்குகின்றன. வரலாறு மீண்டும்

SHARE