இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் இசை அல்பம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட போரின் போது கொலை செய்யப்பட்ட உயிர்களை நினைவு கூரும் வகையில் இசை அஞ்சலி செலுத்தவுள்ளேன். இது எனது கனவாகும்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை குறித்து விழிப்புணர்வினை என்னால் ஏற்படுத்த முடியாது. ஆனால் கடைசி நேரத்தில் நடந்தது என்ன என்பதை இசை ஆவணமாக வெளிப்படுத்த முடியும்.
இது தொடர்பாக கடந்த மூன்றாண்டுகளாக செயலாற்றி வருகிறேன். விரைவில் இசை ஆவணத்தை வெளியிடவுள்ளேன்.
ஹிந்து பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்காணலில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.