தமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிக்க அரசு வழியமைக்கிறது.

682

விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையிலும், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினாலும் இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மாத்தையா உட்பட விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்த ஏனைய இயக்கங்களான ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி, போன்ற இயக்கங்களை இலங்கையரசு தமிழினத்திற்கு எதிராகவே கையாண்டு அதில் வெற்றியும் கண்டது.

விடுதலைப்புலிகளுடனான 2001-2004 வரையான சமாதானப் பேச்சுக்களில் பிரபாகரனுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த விடுதலைப்புலிகளின் இராணுவக் கட்டளைத்தளபதி கருணா அம்மானை, இலங்கையரசு மிக சுலபமாக உல்லாச வாழ்க்கைக்குள் அவரை உள்வாங்கி, வடகிழக்கு என்கின்ற பிரிவினைவாதத்தினை உருவாக்கி, பிரபா – கருணா பிரிவிற்கு வழியமைத்தது.

karuna-and-dayamaster

அதனைத்தொடர்ந்து விடுதலைப்புலிகளின் போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்துவந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்று அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், தமிழ்த்தேசியம் என்பதற்கு இடமளிக்காதவகையில் தமிழ்மக்களின் கலை, கலாச்சாரம் மாற்றப்பட்டு,

மாற்றியமைக்கும் நிகழ்ச்சிநிரலை நிலைநாட்டிக்கொண்டிருக்கும் அதேநேரம், தமிழ்த்தேசியத்திற்காக, தமிழர் போராட்டத்திற்காக ஊடகங்களுக்கு குரல்கொடுத்துவந்த ஊடகவியலாளர் டி.சிவராம், பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிகரன், ஊடகவியலாளர் நிமலராஜன், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க, ஊடகவியலாளர் சுகிர்தரன் ஆகியோர் அக்காலகட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இக்கொலைகளின் பின்னணியாக கருணா குழுவினரையே அரசு பயன்படுத்தியது.

Mr.Kajendiakumar-ponampalam11

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினூடாக, அக்காலகட்டத்தில் விடுதலைப்புலிகளினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், தங்கேஸ்வரி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கனகரத்தினம், பத்மினி ஆகியோர் இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ள அதேரேம், அவர்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினால் ஆசனங்கள் ஒதுக்கப்படாததன் காரணமாகவும், ஒருசிலர் அரசுடன் இணைந்து தமது செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதுவும் அரசிற்கு ஒரு வெற்றியாகவே அமையப்பெற்றுள்ளது.
தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் இனியபாரதி மாநகரசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்விடயமானது மக்கள் மத்தியில் பெரும்விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கருணா குழுவில் இருந்துகொண்டு, ஆட்கடத்தல், துஷ்பிரயோகங்கள், கொலைகள் போன்ற பெரும் அடாவடித்தனங்களை செய்துவந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழ்த்தேசியத்திற்கும்,

விடுதலைப்புலிகளுககும் யார் யார் எதிரிகளாக செயற்பட்டார்களோ அவர்களை இப்பொழுது அரசு உள்வாங்கிக்கொண்டுள்ளது.

 

TNA-defeat

மட்டுமன்றி அவர்கள் மூலமாகவே தமிழ்மக்களுக்கெதிரான செயற்பாடுகளை திட்டமிட்டபடி அரசு நடத்திவருகிறது. இதனை இவர்கள் விளங்கிக்கொண்டாலும் கூட, தமது சுயநலத்திற்காக செயற்பட்டுவருகின்றார்கள்.

இனிவரும் காலங்களில் ஒன்றை மட்டும் விளங்கிக் கொள்ளவேண்டும். ஆயுதப்போராட்டம் என்பது தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனைப்போன்று எவராலும் மனஉறுதியுடன் போராட வாய்ப்பில்லை. அஹிம்சை வழியிலான போராட்டங்களை தமிழ்மக்களாகிய நாம் பழைய குரோதங்களை மறந்து, தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதனூடாக தமிழ்மக்களுக்கான தனித்தேசியத்தை வலுப்படுத்தமுடியும். அத்துடன் பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றுவதோடு, பெரும்பாலான அமைச்சுப்பதவிகளையும் கைப்பற்றி, வடகிழக்கில் சுமுகமான நிலவரங்களை உருவாக்கமுடியும் என்பதனை உணர்ந்துகொள்ளமுடியும். ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுவதை தவிர்த்து, நானே குற்றவாளி என உணர்ந்துகொண்டு செயற்படுவது சிறந்ததாகும்.

mr-tna

ஆகவே தமிழ்க்கட்சிகள் ஒன்றைப்புரிந்துகொள்ளவேண்டும். தமிழினத்திற்கெதிராக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டுவருகின்றன. உலக வரலாற்றில் விடுதலைப்புலிகளின் போராட்டம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. காரணம் 52 பயங்கரவாத நாடுகளுள் தரை,வான்,கடல் மற்றும் கரும்புலிகள் போன்ற படைகளை கொண்டிருந்த நாடு இலங்கை என்ற பெருமையை விடுதலைப்புலிகள் சேர்த்துவைத்திருக்கின்றார்கள். மற்றுமொரு ஆயுதமேந்திய போராட்டம் என்பது தற்போதைய காலத்தில் சாத்தியமற்றதொன்று. தற்போதைய காலகட்டத்தில் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. போர்க்கால சூழலில் உள்ள நிலை தற்போது இல்லை.

images

விடுதலைப்புலிகளின் யாழ் அரசியற் பொறுப்பாளர் தியாகி திலீபன் கூறியதைப்போன்று, மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரும் என்பது போல் தமிழ்மக்கள் வாழ்வில் சுதந்திரம் மலர்ந்தால் அதுவே நலமாகவிருக்கும். அவற்றினை பிளவுபடுத்தும் வகையில் தற்போதைய மோடி அரசுடன் இணைந்து இலங்கையின் மூத்த சிங்கள அரசியல்வாதிகள், தமிழ் அரசியில்வாதிகள் என செயற்பட்டு வருகின்றனர். இதற்கு தமிழ்க்கட்சிகளாகிய எவரும் துணைபோகாது தமிழினத்தின் சுதந்திர வெற்றிக்கு உழைப்பதன் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். ஆகவே அரசாங்கத்தின் அபாயவலைக்குள் சிக்காது, தமிழ்மக்களுக்காக குரல்கொடுக்கும் வகையில் சிந்தித்துச் செயற்படுங்கள். அதுவே தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழ வழியமைக்கும்.

Mr.Kajendiakumar-ponampalam11

 

tna (1)

THINAPPUYAL    [ERANEYAN]

SHARE