தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மக்கள் தொடர்பகமொன்று இன்று(2016-02-22)
காலை முல்லைத்தீவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
காலை முல்லைத்தீவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.





வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கட்கான இம்மக்கள்
தொடர்பகமானது தமிழ்முறைப்படி தமிழ்மொழிவாழ்த்து மற்றும்
தமிழிசைப்பாடல்கள் இசைக்கப்பட்டு அவரது அன்னையாரால் மலர்மாலை அவிழ்த்து
திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட
கள்ளப்பாடு கிராமத்தில் அமைந்துள்ள இத்தொடர்பகத்தில் தனது
மக்கள்சந்திப்புக்கான நாளாக ஒவ்வொரு சனிக்கிழமையும் அமையும் எனவும்
மற்றைய நாட்களில் பணியகமானது தொடர்ந்தும் இயங்குநிலையில் இருக்கும்
எனவும் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.