தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம். நாடு கடந்த அரசாங்கம்

304

சிறிலங்கா சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்  அரசியற்  கைதிகளின்  விடுதலையினை  வலியுறுத்தி லண்டனில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  ஒன்று இடம் பெற்றுள்ளது

கடந்த 20/12/2005 ஞாயிற்று கிழமை அன்று பிரித்தானிய  தலைநகரான லண்டனில் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன் இப் போராட்டம் இடம்பெற்றுள்ளது காலை 11மணிக்கு ஆரம்பமாகிய இந்த  போராட்டம் மாலை 6 மணி வரை நடை பெற்றது ..இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை போர்க்கைதிகளாக அங்கிகரித்து அவர்களது பாதுகாப்பினையும் விடுதலையினையும் வலியுறுத்தி இலங்கை அரசிடம் பிரித்தானிய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும்  அனைத்துலக  சமூகத்திடம் கோரும் முகமாகவும் இப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப் போராட்டத்தில் மழை  குளிர்  என பாராது நூற்றுக்கணக்கான  ஈழத்து புலம்பெயர் உறவுகள் கலந்து கொண்ட மையும் இங்கு குறிப்பிடத்தக்கது

IMG_20151223_044057

IMG_20151223_161449

SHARE