தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அக்கறைகொள்ளாத சர்வதேசம்

267

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த ஐ.நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் ஹூசைன் அவர்கள் முன்வைத்த கருத்தானது தமிழினத்தின் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் என்னவெனில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் இன்னும் 210 நபர்கள் சிறைகளில் அரசியல் கைதிகளாக உள்ளனர். இவர்களின் விடுதலை தொடர்பில் சர்வதேசம் அக்கறைகொள்ளாது. இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையா? அல்லது போர்க்குற்றமா? ஏன்பது தொடர்பில் இந்நாட்டின் ஜனாதிபதியே தீர்மானத்தினை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சர்வசேதத்தின் இன்றைய நிலைப்பாடானது பயங்கரவாதப் போராட்டமானது இனி எந்தவொரு நாட்டிலும் இருக்கக்கூடாது என்பதே. இதனை மையமாகக்கொண்டே இலங்கை விவகாரத்திலும் சர்வதேச சமுகம் செயற்படுகின்றது. இலங்கையில் யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்தபோது சர்வதேச நாடுகள் யுத்தத்தினை சமாதானத்தில் முடித்துவைக்க முன்வரவில்லை மாறாக தமிழினத்தையும், விடுதலைப்போராட்டத்தையும் அழித்தொழிக்கும் நோக்கிலேயே செயற்பட்டன. இந்நிலையில் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி தயவு காட்டினாலே தவிர, வேறு ஏதாவது முறைகளில் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது கேள்விக்குறியே.

a1d1dc8977cdc0e151683e442c926a10_L

SHARE