தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்­கான தீர்­வினை காண இவர்கள் விரும்­பினால் ஆரம்­பத்­தி­லேயே அதி­காரப் பகிர்வு பற்றி வலி­யு­றுத்­தி­யி­ருக்க முடியும்.- சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

407

சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் அனைத்­துத்­த­ரப்பு இணக்­கப்­பாடு தொடர்பில் பேசு­கின்­றனர். அதி­காரப் பகிர்வு விட­யத்தில் அர­சாங்கம் எம்முடன் பேசத் தயாரா? என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கேள்வி எழுப்­பி­யது.

சர்­வ­தே­சத்தின் நடு­நி­லைமை இருந்தால் மாத்­தி­ரமே இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு எட்­டப்­படும் எனவும் கூட்­ட­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யது.

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 26ஆவது கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில், அரச மற்றும் எதிர்த்­த­ரப்­புக்கள் அதி­காரப் பகிர்வு விட­யத்தில் கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றமை தொடர்பில் வின­விய போதே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­ பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து ஆண்­டு­களில் எவரும் அதி­காரப் பகிர்வு பற்­றியோ இரு தரப்பு இணக்­கப்­பாடு பற்­றியோ பேச விரும்­ப­வில்லை.

இன்று இலங்கை மீதான சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் ஆளும் கட்சி உறுப்­பி­னர்­களும் எதிர்க்­கட்­சி­களும் அதி­காரப் பகிர்வு பற்­றிய கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றனர்.

உண்­மை­யி­லேயே தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்­கான தீர்­வினை காண இவர்கள் விரும்­பினால் ஆரம்­பத்­தி­லேயே அதி­காரப் பகிர்வு பற்றி வலி­யு­றுத்­தி­யி­ருக்க முடியும்.- சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

அர­சாங்கம் தமது சுய­ந­லத்­தினை கருத்திற் கொண்டே இவ்­வாறு கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றது.

இனப் பிரச்­சி­னைக்­கான தீர்­வினை பெற்­றுக்­கொள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் பல­த­ரப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்தும் பய­னற்று போய்­விட்­டது.

இவ்­வா­றான நிலை­மையில் இணக்­கப்­பாட்­டினை அரச தரப்பு விரும்­பாத சந்­தர்ப்­பத்தில் சர்­வ­தே­சத்தின் தலை­யீட்டின் மூலம் சர்­வ­தேச மத்­தி­யஸ்­தத்தில் ஓர் தீர்­வினைப் பெற்­றுக்­கொள்­வதே ஒரே வழி­யாகும். அத­னையே நாமும் எதிர்­பார்க்­கின்றோம்.

அதேபோல் இப்­போ­தா­வது அர­சாங்கம் தமது உறு­தி­யான நிலைப்­பாடு என்ன என்­பதை வெளிப்­ப­டை­யாகத் தெரி­விக்க வேண்டும்.

அல்­லது அதி­காரப் பகிர்வு பற்றி எம்­முடன் பேச்­சு­வார்த்தை நடாத்த தயாரா? என்­பதை தெரி­விக்க வேண்டும்.

மாறாக அர­சாங்­கத்­திற்குள் இருக்கும் ஒரு சிலர் அதிகாரப் பகிர்வு விடயத்தில் பேசத் தயாரில்லை எனக் கூறுவதும், வேறு சிலர் அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவதும் அர்த்தமற்ற விடயமாகும்.

வெறுமனே காலத்தை கடத்தும் பேச்சுவார்த்தைக்கு நாம் இனி ஒருபோதும் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

 

SHARE