தமிழ் மக்கள் அவைக்குள் கருணா, டக்ளஸின் ஒத்துழைப்பு

335

 

தமிழ் மக்கள் அவைக்குள் அங்கத்துவம் பெற்றிருப்பவர்கள் எவரும் பின்கதவு வழியாக வந்தவர்கள் இல்லை. எல்லோரும் முன்கதவால் வந்தவர்களே என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பதிலடி கொடுத்துள்ளார்.

KARUNA-and-Douglas

இன்றைய தினம் தமிழ் மக்கள் அவை 2ம் அமர்வின் நிறைவில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,

தமிழ் மக்கள் அவைக்குள் மக்களால் அங்கீகரிக்கப்படாதவர்கள், அங்கீகரிக்கப்படாத கொள்கைகளுடன் நுழைந்து அவற்றை மீண்டும் முன்கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என கூறிய கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் முதலமைச்சரும், மக்கள் அவை இணை தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரனிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடாபில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

மக்கள் அவைக்குள் எவரும் பின் கதவு வழியாக நுழைந்திருக்கவில்லை. எல்லோரும் முன்கதவு வழியாகவே வந்திருக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் அவைக்கு ஒரு கொள்கை இருக்கின்றது. அந்த கொள்கைக்கு சுமந்திரன் உடன்பட்டால் அவரும் எமது அவையில் இடம்பெறாலம் என முதலமைச்சர் பதில் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்கள் அவையில் முன்னாள் அமைச்சர்கள் கருணா மற்றும் டக்ளஸ் தேவானந்தா இணைக்கப்படுவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

எமக்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமானது. என்பதை நாங்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றோம்.

இந்நிலையில் எங்களுடைய கருத்துக்களுக்கு வித்தியாசமான கருத்துக்களை கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காக அவ்வாறான கருத்துக்களை கொண்டிருப்பவர்களை எதிரிகளாக பார்க்க முடியாதே?

எனவே நாங்கள் எங்களுடைய பணியை தொடர்ந்தும் செய்வோம். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைத்தால் நல்லது. ஆனால் தமிழ் மக்கள் அவைக்கு ஒரு கொள்கை இருக்கின்றது. அந்த கொள்கை விடயத்தில் நாங்கள் சற்றும் நெகிழ்வு தன்மையை காட்டப்போவதில்லை என்றார்.

எதற்காக தமிழ் மக்கள் அவையில் அங்கம் பெற்றேன்: விக்கி விளக்கம்

தமிழ் மக்களுடைய நலன்களை பூர்த்தி செய்யும் வகையில், தமிழ் மக்களுடைய விருப்புக்களை நிறைவு செய்யும் வகையில் தமிழ் மக்கள் அவையின் செயற்றிட்டங்கள் மற்றும் கொள்கை அமைய பெற்றிருப்பதை உணர்ந்து  கொண்டதனாலேயே மக்கள் அவையில் அங்கம் பெற்றேன்.

இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் தமிழ் மக்கள் அவை 2ம் அமர்வு நடைபெற்றிருந்தது.

இதன் நிறைவில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது முதலமைச்சர் தமிழ் மக்கள் அவையில் எதற்காக அங்கத்துவம் பெற்றார்?என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

குறித்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

வடமாகாணசபையில் எங்கள hல் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவிடயங்களை தமிழ் மக்களுடைய நலன்சார்ந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான எண்ணப்பாடுகள் காணப்பட்டமையினால் மக்கள் அவையில் நான் பங்கெடுத்துள்ளேன்.

இந்த மக்கள் அவை தொடர்பாக அதன் ஒழுங்கமைப்பாளர்கள் என்னோடு பேசியபோது அவர்களிடம் தெளிவான நிலைப்பாடுகளை கண்டிருந்தேன்.

அதனால் இந்த அவையில் ங்கத்துவம் பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டை நான் எடுத்திருந்தேன்.

அந் தவகையிலேயே இந்த அவையில் பங்கெடுக்கும் தீர்மானத்தை எடுத்தேன். பங்கெடுத்திருக்கிறேன் என முதலமைச்சர் கூறினார்.

SHARE