முதல் நாள் சந்தித்த பாடசாலை மாணவியொருவரை , அடுத்த நாள் தனியாக அழைத்து துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய ஒரு பிள்ளையொருவரின் தந்தை தம்புள்ளையில் வைத்து கைதாகியுள்ளார்.
36 வயதான குறித்த நபர் , 16 வயதான பாடசாலை மாணவியை தம்புள்ளை நகரில் முதன்முறையாக சந்தித்துள்ளதுடன் இச்சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இதன்பின்னர் இருவரும் கையடக்கத்தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
இந்நிலையில் அடுத்த நாள் (28 ஆம் திகதி) அந்நபர், அம்மாணவியை தனியாக சந்திக்கவரும் படி கூறியுள்ளார். மாணவியும் அவரை சந்திக்க வந்த வேளையில், அவரை தனியாக அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.
இதன்பின்னர் மாணவியின் முறைப்பட்டையடுத்து அந்நபரை , மாணவி மூலமே அதே இடத்துக்கு வரவழைத்த சிகிரிய பொலிஸார் அச் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.