நீரோடையில் உலர்ந்து போயிருந்த மீன்களின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் குழு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
இவர்களின் இந்த செயலை கண்டு பலர் வியப்படைந்ததுடன் தங்களது வாழ்த்துக்களையும்தெரிவித்திருந்தனர்.
ஆனால், இதில் யாரும் எதிர்பாராத சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதாவது, இந்த குழுவில் இருந்த 16 வயது இளைஞன் Godakawela ஆற்றில் எதிர்பாராத விதமாக மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனின் சடலத்தை அந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
நீரின்றித் தத்தளித்துக் கொண்டிருக்கும் மீன்களின் உயிரை காப்பாற்றிய இளைஞனுக்கு, அவனுடைய விதி நீரினாலேயே போய்விடும் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டான்.
“தர்மம் தலைகாக்கும்” என்பார்கள் ஆனால் இந்த இளைஞனின் சம்பவத்தில் இது பொய்த்துப்போயுள்ளது. மக்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.