தற்கொலை குறித்து மீண்டும் ஒரு சின்னத்திரை நடிகை வாட்ஸ் அப்பில் கூறிய தகவல்- அடுத்த வைரல்

212

தற்கொலை குறித்து மீண்டும் ஒரு சின்னத்திரை நடிகை வாட்ஸ் அப்பில் கூறிய தகவல்- அடுத்த வைரல் - Cineulagam

சாய் பிரசாந்தின் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதை தொடர்ந்து சின்னத்திரை நடிகர் சாய் சக்தி தான் தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும், இதுக்குறித்து எல்லோரும் விரைவில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என சின்னத்திரை நடிகை நிலானி கூறிய வாட்ஸ் அப் ஆடியோ தான் தற்போது வைரல்.

இதில் ‘நான் சாய் சக்தி சொல்வதை அப்படியே ஏற்கிறேன், பல தொலைக்காட்சிகள் இதையே தான் செய்கிறார்கள், நம்பி அழைத்து வந்து ஒரு நிகழ்ச்சியும் தராமல் இறுதியில் கஷ்டத்திற்கு ஆளாக்கின்றனர்.

இது ஒரு நடிகரோ, இரு நடிகரோ சேர்ந்து எடுக்கும் முடிவல்ல, ஒட்டு மொத்த சின்னத்திரை நடிகர்களும் சேர்ந்து இதற்காக போராட வேண்டும்’ என பேசியுள்ளார்.

SHARE