தற்கொலை செய்த மாணவனுக்கு யாழ்.பல்கலைகழகத்தில் மெழுகுவர்த்தி ஏற…
தற்கொலை செய்த மாணவனுக்கு யாழ்.பல்கலைகழகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி #Videoஅரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி தற்கொலை செய்த மாணவனுக்கு யாழ்.பல்கலைகழகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மாணவின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மாணவர்கள் முன்னெடுத்தனர்.யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் இன்று மதியம் 12 மணியளவில் ஒன்று கூடிய பல்கலைகழக மாணவர்கள் உயிரிழந்த மாணவனுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.அதனை தொடர்ந்து உயிரிழந்த மாணவின் கோரிக்கையை அரசாங்கம் கால தாமதமின்றி நிறைவேற்றம் வேண்டும் என கோரி பல்கலைகழக வளாகத்தினுள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினையும் முன்னெடுத்து இருந்தனர்.காணொளி & செய்தி – மயூரப்பிரியன் – ஊடகவியலாளர் – யாழ்ப்பாணம்
Posted by Sooriyan FM on 26 நவம்பர் 2015