தற்போது இலங்கையில் 6000 யானைகள் மாத்திரமே காணப்படுகின்றன.

93

இலங்கையில் ஆண்டு தோறும் சராசரியாக 250 யானைகள் உயிரிழப்பதாக புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன.

தற்போதுள்ள புள்ளி விவரங்களின் படி இலங்கையில் 6000 யானைகள் மாத்திரமே காணப்படுகின்றன.

2017ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் 256 யானைகள் உயிரிழந்துள்ளதோடு 2016ஆம் ஆண்டு 279 யானைகள் உயிரிழந்துள்ளன. இதேவேளை, யானைகளின் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கான மிக பிரதான காரணமாக காணப்படுகின்றது மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்களே என கூறப்படுகின்றது.

மேலும், இலங்கையின் உடவள வனப்பகுதி என்பது ஒருகாலத்தில் யானைகளின் சொர்கபுரியாக காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவருவதாக யானைகள் குறித்த ஆய்வு கூறுகின்றது.

இந்த நிலையில், தாயை விட்டு நிர்கதியாகும் யானைகள் உடவள சரணாலயத்தில் 3 தொடக்கம் 5 ஆண்டுகள் பராமரிக்கப்படுகின்றன. அதன்பிறகு பராமரிக்கப்படுகின்ற யானைகள் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மாத்திரம் அவை கொண்டு சென்று விடப்படுகின்றன.

மேலும், உணவு தேடி ஊருக்குள் வருகின்ற யானைகளை மக்கள் திசைதிருப்புகின்றனர். இதனால் திசைமாறி யானைகள் ஓடுவதனாலேயே பெரும்பாலான யானை குட்டிகள் நிர்கதியாக்கப்படுகின்றன.

அதேபோல், உடவள வனப்பகுதிக்கு முன்னொரு காலத்தில் சென்றால் அங்கு 50 தொடக்கம் 100 யானைகளை சாதாரணமாக பார்க்க முடியும். ஆனால் தற்போது அவற்றின் நிலைமை மாறி வருகின்றது.

மேலும், யானைகளின் உயிரிழப்புகளுக்கு காடுகள் அழிக்கப்படுவதே இதற்கு மிகப் பிரதான காரணமாக காணப்படுவதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SHARE