தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்சிவகார்த்திகேயன். இவரின் சம்பளம் தற்போது கோடிகளில் உள்ளதாக பலரும் கூறுகின்றனர்.
ஆனால், ரஜினி முருகன் படத்தினால் தனக்கு எந்த பயனும் இல்லை என சிவகார்த்திகேயன் கூறியதாக ஒரு செய்தி உலா வந்தது.
இந்நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் ‘சிவகார்த்திகேயன் தற்போது ரஜினிமுருகனால் தனக்கு நஷ்டம், அதனால், சொந்தப்படம் எடுக்கிறேன் என கூறுகிறார்.
ஏன், இதையே அவர் மெரீனா படம் நடிக்கும் போது கூறியிருக்கலாமே, அப்போது அவரை தூக்கிவிட்டது ஒரு தயாரிப்பாளர் தானே? அப்போது சொந்தப்படம் எடுக்காமல் ஏன் தற்போது எடுக்கவேண்டும்?’ என கூறியுள்ளார்.