இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இன்று தலதா மாளிகைக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் நேற்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்திருந்தார்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனை சந்தித்து காணாமல் போனோர் தொடர்பான அறிக்கையொன்றையும் முதலமைச்சர் மூலமாக பெற்றுக்கொண்டார்.
இதன்போது சுமார் 40 ஆயிரம் வரையான காணாமல் போனோர் தொடர்பான விபரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.