தலவாகலை டயகம பிரதேசத்தில் 2013 ம் ஆண்டு ஒருவரை வெட்டி கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரணதன்டனை விதித்து நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட (தந்தை) பெருமாள் மகாலிங்கம் வயது 60 (மகன்) மகாலிங்கம் சிவனேஸ்வரன் வயது 37 (மச்சான்), பாலகிருஸ்னன் சுவனேஸ்வரன் வயது 32 ஆகிய மூவருக்கே மரணதன்டனை 09.09.2016. மரணதன்டனை விதிக்கப்பட்டது.
2013.08.06 அன்று டயகம பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டயகம. ஈஸ்ட் தோட்டத்தை சேர்ந்த சந்தனம் மைக்கல் வயது 39 என்பவரை வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் அக்கரப்பத்தனை பொலிஸாரினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு நுவரெலிய மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்ற நிலையில் கொலை குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட மேற்படி மூவருக்கும் மரணதன்டனை விதித்து மேல் நீதிமன்ற நீதீபதி லலித் வீரதுங்க தீர்ப்பளித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்