இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும், தமிழக மீனவர்களை நேற்றிரவு தலைமன்னார் கடற்படையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று பதன்கிழமை இரவு இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் இரண்டு படகுகளில் வந்திருந்த தமிழக மீனவர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது