தளபதியே சொல்லிட்டாரா! பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியின் திடுக்கிடும் அனுபவம்

188

தமிழ் சினிமாவில் விஜய்யின் மீதான எதிர்பார்ப்பு எப்போதுமே அதிகம் தான். அவரின் படங்கள் மட்டுமல்ல, அவர் விருது விழாவுக்கு வருகிறார் என்றால் பெரியளவில் மாஸ் இருக்கும்.

அவரின் பேச்சை கேட்கவும், நேரில் அவரை பார்க்கவுமே ஆயிரக்கணக்கானோர் கூட்டம் கூடிவிடுவார்கள். அண்மையில் விஜய் தொலைக்காட்சியின் விருது விழாவில் அவரால் பங்கேற்கமுடியாமல் போனது.

இது ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக இருந்தது. இந்நிகழ்ச்சியின் முக்கிய தொகுப்பாளினி டிடி திவ்யதர்ஷினி. பல ரசிகர்களை பெற்ற இவர் சமீபத்திய பேட்டியில் விஜய் பற்றி கூறினார்.

இதில் அவர் என்னால் விஜய் விருது விழாவை மறக்க முடியாது. அதில் விஜய் சார் என் பெயரை சொன்ன போது நான் கவனிக்கவில்லை. நிகழ்ச்சி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டிருந்தேன்.

பின்னர் தான் தெரிந்தது. விஜய் என் பெயரை குறிப்பிட்டிருக்கிறார் என்று. லேட்டாக தான் என் காதில் கேட்டது. அப்போது என்னை கூப்பிட்டு காட்ட மாட்டார்களா என்பது போல் இருந்தது.

அந்த தருணத்தில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன் என கூறியுள்ளார்.

SHARE