தான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட மைத்திரி! முறியடிக்கும் நடவடிக்கை தீவிரம்

146

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவே காரணமாகிவிட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறியடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

SHARE