
கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த கஹவத்த, கொடகெதன கொலைச் சம்பவத்தை விசாரித்து வந்த பொலிசார் இன்று பி.ப கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகனைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
39 வயதான சந்ரானி ஸ்வர்னலதா எனும் குறித்த பெண், கடந்த 5ம் திகதி இரவு காணாமல் போயிருந்த நிலையில் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து பல்வேறு ஊகங்களும் நிலவி வந்த போதும் தற்போது குறித்த பெண்ணின் 18 வயதாகும் மகனைப் பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.