தாயை கத்தியால் குத்திய மகன் கைது.

174

தனது தாயாரை கத்தியால் குத்திய மகனை கண்டிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

63 வயதுள்ள தாயையே 43 வயதுடைய மகன் கத்தியால் குத்தியதாக கைதானதாக கண்டி பொலிசார் தெரவித்தனர்.

இச்சம்பவம் நேற்றுக் காலை 5.30 மணியளவில் இடம் பெற்றதாகவும் இது ஒரு குடும்பப் பிரச்சினை காரணமாக இடம் பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனை அடுத்து சந்தேநபரை அவரின் இரு சகோதரர்கள் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட பெண்ணின் இடுப்புப் பகுதியில் காயமேட்பட்டுள்ளதுடன் அவர் தற்போது கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

mother01

SHARE