திடிர் கோடிஸ்வர அரசியல்வாதிகள் 1000 பேர் மீது முறைபாடுகள்

349
திடிரென கோடிஸ்வரர்களான அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்பாக கடந்த இரண்டு மூன்று மாத காலப்பகுதியில் இலஞ்சம் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு 1000ற்கும் அதிகமான முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சொத்து மற்றும் சொத்து பரிமாற்றங்கள் தொடர்பாக கிடைக்கப்பட்ட முறைப்பாடுகளில் பலவற்றிற்கான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும்  ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆணையாளர் தில்ருக்சி டயஸ் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார்.

அனைத்து விசாரணைகளையும் பாதிக்காத வகையில் ரகசியமாக சொத்து மற்றும் சொத்து பரிமாற்றங்கள் தொடர்பாக கிடைக்கப்பட்ட 808 முறைபாடுகள் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE