தெலுங்கு சினிமாவில் பிரின்ஸ் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் மகேஷ் பாபு.
இவர் படங்கள் நடிப்பதை தாண்டி தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதை வளர்ச்சி பெறவும் உழைத்து வருகிறார்.
சமீபத்தில் இவரது உருவத்தில் சிங்கப்பூரில் மெழுகு சிலை திறக்கப்பட்டது, அந்த புகைப்படமும் நல்ல வைரலானது. இப்போது இவர் மஹரிஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு அடுத்த படத்திற்கான சம்பளத்தை இவர் உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அடுத்த படத்திற்கு ரூ. 50 கோடி சம்பளம் என்று தெலுங்கு மீடியாக்களில் கூறுகின்றனர்.