யாழ். மருதனார் மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய நபர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்து சமயத்திற்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் தொடர் வன்முறைகளை கண்டித்து நேற்று முன் தினம் யாழ். மருதனார்மடத்திலுள்ள சுந்தர ஆஞ்சநேயர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு குறித்த நபர் வீடு திரும்பிய நிலையில் நீராடிவிட்டு தேநீர் அருந்தி கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
யாழ். சுன்னாகத்தை சேர்ந்த 40 வயதுடைய சுபா தர்சன் என்பவரே இவ்வாறு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.