திருகோணமலையில் கடலுக்கு சென்ற மூன்று பேரில் ஒருவர் மாயம்!

278

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று பேரில் ஒருவரை காணவில்லை என குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 04.55 மணியளவில் நண்பர்களுடன் கடல் குளிக்கச் சென்ற 02ஆம் வட்டாரம், இரனகேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் சுபாகரன் (16 வயது ) ஆகிய தனது மகன், வீடு திரும்பவில்லை என தந்தையான கனகசபை பாலசுந்தரம், குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதனையடுத்து, பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து, நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக கூறப்படும் இளைஞனை தேடும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE