திருகோணமலையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் பலி

232

201602100234200099_motor-cycle-truck-collision-husbandwife-sordid-death_secvpf

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

டிப்பர் ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு சிறுவர்களே உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மூதூர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சேருநுவர பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

SHARE