திருகோணமலை கடற்படை முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள்

347

 

திருகோணமலை கடற்படை முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல்போனோர் தொடர்பான செயற்குழுவின் பிரதிநிதிகள் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

1429112819-9353-415x260

அவர்களின் விஜயத்தின் ஒரு கட்டமாக திருகோணமலை கடற்படை முகாமிலும் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது முகாமுக்குள் அமைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் ரகசிய தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதைக் கூடங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அத்துடன் குறித்த சித்திரவதைக் கூடங்களில் இருந்து மனித எலும்புக் கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பொலிஸார் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்ததுடன், எலும்புக்கூடுகளையும் தமது பொறுப்பில் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE