திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பிலான விஷேட செயலமர்வு இன்று (23) காலை 9.00 மணிக்கு உப்புவெளி ஜெகப் ஹோட்டலில் ஆரம்பமானது.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்செயலமர்வில் 40 ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி ரங்க கலன்சூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார ஆகியோரும் கலந்து கொண்டனர்.


