திருடப்பட்ட வடகொரியாவின் இராணுவ ரகசியங்கள் – ஒப்புக்கொண்ட அமெரிக்கர்

338
கொரிய வம்சாவளி அமெரிக்கரான கிம் டாங் சுல் என்பவர் வடகொரியாவின் இராணுவ ரகசியங்களை திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்காக உளவு பார்ப்பதாக, அமெரிக்க குடிமக்களை வடகொரியா அடிக்கடி கைது செய்து வருகிறது.

இந்த குற்றச்சாட்டின்கீழ் சமீபத்தில் ஓட்டோ வாம்பையர் என்ற அமெரிக்கருக்கு வடகொரியா 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கியது.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிம் டாங் சுல் வடகொரியாவில் கைது செய்யப்பட்டார்.

இவர் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் தூண்டுதலின் பேரில் மன்னிக்க முடியாத உளவு வேலையில் ஈடுபட்டதாக வடகொரியா குற்றம் சாட்டியது.

இது தொடர்பாக வடகொரியா மீது மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியிருந்த நிலையில், கிம் டாங் சுல் தனது குற்றத்தை தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

தென்கொரியாவுடன் இணைந்து வடகொரியாவின் ராணுவம் மற்றும் அரசின் ரகசியங்களை திருடியதாக கூறிய அவர், இதற்காக தனக்கு பணம் வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

SHARE