திருடிய காதலன் சிறையில்!

175

தமது காதலியை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்கள் காலியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காலி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வீடுகள் மற்றும் கடைகளில் உள்நுழைந்து 18 இலட்சத்திற்கும் அதிகமான நகைகள் பணம் மற்றும் மின் உபரணங்களை குறித்த இளைஞர்கள் திருடியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 18 மற்றும் 21 வயதானவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

சந்தேகநபர்கள் நேற்றைய தினம் பத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் இவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை 21 வயதான பிரதான சந்தேகநபரின் காதலியை மகிழ்ச்சிப் படுத்துவதற்காகவே இவ்வாறு திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

SHARE