திருட்டு மின்சாரம் எடுத்ததால் ஏற்பட்ட விபரீதம்!

100
Image

காவந்திஸ்ஸபுர, சேருநுவர பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) காவந்திஸ்ஸபுர பகுதியில் மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழந்தார். சந்தேக நபர் தனது தோட்டத்திற்கு திருட்டு மின்சாரம் பெற்று பாவித்ததினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிப்பதோடு சந்தேக நபரை திங்கட்கிழமை (2) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

SHARE